Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு: விழுந்து நொறுங்கியதா?

மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு: விழுந்து நொறுங்கியதா?
, திங்கள், 3 ஜூன் 2019 (19:21 IST)
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 என்ற சரக்கு விமானம் இன்று அசாமிலிருந்து அருணாச்சலப் பிரதேசத்துக்கு சென்றபோது திடீரென மாயமானதாக வெளிவந்த தகவல் குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த விமானத்தில் 8 விமானிகள் மற்றும் 5 பயணிகள் இருந்த நிலையில் அவர்களது கதி என்ன? என்ற கேள்வி அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மாயமான இந்திய விமானப்படையின் ஏ.என்.32 ரக விமானத்தின் உடைந்த பாகங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக திடுக்கிடும் செய்தி வெளிவந்துள்ளது. 
 
அருணாச்சலபிரதேச மாநிலத்தின் மேற்கு சியாங்க் மாவட்டத்தின் டாடோ என்ற இடத்தில் விமானத்தின் பாகங்கள் சிதறி கிடப்பதாகவும், இதுகுறித்து செய்தி தெரிய வந்ததும் இந்திய விமானப்படையினர்களும் மீட்புப்படையினர்களும் அந்த இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மீட்புப்பணிக்கு பின்னரே விமானத்தில் பயணம் செய்த 13 பேர்களின் கதி என்ன என்பது தெரிய வரும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’ தூக்கமின்றி தவிக்கிறேன் ” மோடிக்கு கடிதம் எழுதிய சிறுமி...