Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூய்மையான காற்று… 2024 இலக்கை 100 நாட்களுக்குள் எட்டிய இந்தியா!

Webdunia
ஞாயிறு, 5 ஜூலை 2020 (09:15 IST)
இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் காற்றின் தரம் மிக வேகமாக முன்னேறி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்தியாவின் பெரு நகரங்களான டெல்லி, மும்பை மற்றும் சென்னை ஆகியவற்றில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வந்தது. இதற்கு முக்கியக் காரணங்களாக தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகை மற்றும் வாகனப் போக்குவரத்து ஆகியவை சொல்லப்பட்டு வந்தன. கடந்த ஆண்டு டெல்லியில் மோசமான காற்று மாசு சூழல் உருவாகி மக்கள் அவதிக்குள்ளாகினர்.

இதனால் காற்று மாசுபாட்டைக் குறைப்பது குறித்து நிறையக் கருத்துகள் சொல்லப்பட்டு வந்தன. இதன் ஒரு அங்கமாக 2024ஆம் ஆண்டு தேசிய தூய்மையான காற்றை சுவாசித்தல் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இப்போது இந்தியாவில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காற்றின் தரம் மிக வேகமாக உயர்ந்து வருவதாக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  இந்த செய்தியானது பெருநகர மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments