Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலத்திற்கு அடியில் சிக்கிக்கொண்ட ஏர் இந்தியா விமானம்! மும்பை அருகே பரபரப்பு..!

பாலத்திற்கு அடியில் சிக்கிக்கொண்ட ஏர் இந்தியா விமானம்! மும்பை அருகே பரபரப்பு..!
, சனி, 30 டிசம்பர் 2023 (09:32 IST)
மும்பை அருகே பழுதடைந்த விமானத்தை லாரியில் வைத்து எடுத்துச் சென்றபோது பாலத்தில்  திடீரென சிக்கிக் கொண்டதை அடுத்து பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

மும்பையில் இருந்து அசாம் மாநிலத்திற்கு பழைய ஏர் இந்தியா விமானத்தை லாரியில் வைத்து கொண்டு சென்றபோது பாலத்தின் அடியில் திடீரென விமானம் சிக்கிக் கொண்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சில மணி நேரம் போராட்டத்திற்கு பின் லாரி மீட்கப்பட்டதாகவும் லாரி டிரைவரிடம் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அடிப்படை அறிவு கூட இல்லாமல் லாரி டிரைவர் பாலத்தின் அடியில் எப்படி விமானம் உள்ள லாரியை ஓட்டு செல்லலாம் என்றும் போக்குவரத்து அதிகாரிகள் இதை எப்படி அனுமதித்தார்கள் என்றும் விசாரணை நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமலையில் மீண்டும் சிறுத்தை, கரடிகள் நடமாட்டம்: பக்தர்களுக்கு எச்சரிக்கை..!