Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா நோயாளி சென்ற விமானம்; கழன்று விழுந்த சக்கரம்! – மும்பையில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (08:47 IST)
நாக்பூரில் இருந்து கொரோனா நோயாளியை ஏற்றி சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமான சக்கரம் கழன்று விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா நோயாளிகளை உடனடியா பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல ஏர் ஆம்புலன்ஸ் விமான சேவைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாக்பூரில் இருந்து ஐதராபாத்துக்கு கொரோனா நோயாளி, அவரது, உறவினர் மற்றும் ஒரு மருத்துவரை சுமந்து கொண்டு ஏர் ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது.

விமானம் பறக்க தொடங்கிய போது விமான சக்கரங்கள் கழண்டு விழுந்ததால் பரபரப்பு எழுந்தது. இதை தொடர்ந்து உடனடியாக மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் உதவிகேட்டு அங்கு விமானம் தரையிறக்கப்பட்டது. விமானம் சில உராய்வுகளுடன் பத்திரமாக தரையிறங்கிய நிலையில் அதில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments