Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா நோயாளி சென்ற விமானம்; கழன்று விழுந்த சக்கரம்! – மும்பையில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (08:47 IST)
நாக்பூரில் இருந்து கொரோனா நோயாளியை ஏற்றி சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமான சக்கரம் கழன்று விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா நோயாளிகளை உடனடியா பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல ஏர் ஆம்புலன்ஸ் விமான சேவைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாக்பூரில் இருந்து ஐதராபாத்துக்கு கொரோனா நோயாளி, அவரது, உறவினர் மற்றும் ஒரு மருத்துவரை சுமந்து கொண்டு ஏர் ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது.

விமானம் பறக்க தொடங்கிய போது விமான சக்கரங்கள் கழண்டு விழுந்ததால் பரபரப்பு எழுந்தது. இதை தொடர்ந்து உடனடியாக மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் உதவிகேட்டு அங்கு விமானம் தரையிறக்கப்பட்டது. விமானம் சில உராய்வுகளுடன் பத்திரமாக தரையிறங்கிய நிலையில் அதில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments