Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது குழந்தைக்கு வாக்குரிமை இல்லையா? மோடியும் வாக்குரிமை இழப்பார்: ஒவைசி பதிலடி

Webdunia
திங்கள், 27 மே 2019 (15:09 IST)
3வது குழந்தைக்கு வாக்குரிமை இல்லை என்று சட்டம் கொண்டு வந்தால் பிரதமர் மோடியும் வாக்குரிமையை இழப்பார் என ஏஐஎம்.ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி பதிலடி கொடுத்துள்ளார். 
 
நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாபா ராம்தேவ், இந்தியாவின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ள யாரையும் அனுமதிக்க கூடாது என்றும் மீறி மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்தால் அந்த குழந்தைக்கு ஓட்டுரிமை கொடுக்க கூடாது என்றும் பேசினார்.
 
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று பேசிய ஏஐஎம்.ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி, பாபா ராம்தேவ் கூறுவது போல் இப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தால் பிரதமர் மோடியும் ஓட்டுரிமையை இழப்பார். ஏனெனில் அவரது குடும்பத்தில் அவர் மூன்றாவது குழந்தைதான் என்று கூறினார்.
 
மேலும் சிறுபான்மையினர்களின் அச்சத்தை நீக்க வேண்டும் என்று உதட்டளவில் சொன்னால் மட்டும் போதாது என்றும் பசுப்பாதுகாவலர்கள் என்ற போர்வையில் இருக்கும் குண்டர்களை அடக்கினாலே சிறுபான்மையினர்களின் அச்சம் விலகிவிடும் என்றும் ஒவைசி மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments