Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீனாவில் இருந்து இந்தியா வந்தவருக்கு கொரோனா : மீண்டும் ஆரம்பிக்கும் பிரச்சனை!

tested
, ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (19:08 IST)
சீனாவில் இருந்து இந்தியா வந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மீண்டும் கொரோனா பிரச்சினை இந்தியாவில் தலைதூக்கி உள்ளதாக கருதப்படுவதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது
 
சீனாவில் தினமும் கோடிக்கணக்கானவர்களுக்கு கொரோனா  வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் சீனா உள்பட மற்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது 
 
இந்த நிலையில் சீனாவில் இருந்து ஆக்ரா வந்தவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஆக்ராவின் முக்கிய பகுதிகளில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மதமாற்றம்? உத்தரகாண்டில் போராட்டம்!