Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய அணியின் வெற்றிக்கு இதுதான் காரணம் - கேப்டன் ராகுல்

இந்திய அணியின் வெற்றிக்கு இதுதான் காரணம் - கேப்டன் ராகுல்
, ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (14:25 IST)
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 81 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில் அஸ்வின் மற்றும் ஸ்ரேயாஸ் ஆகியோர் நிதானமாக விளையாடி ஆட்டத்தை வெற்றிப் பக்கம் நோக்கி நகர்த்தினர்.

இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற அஸ்வின் பேசும்போது “நீங்கள் நடுவில் உள்ள வீரர்களை நம்புகிறீர்கள் (இக்கட்டான சூழ்நிலைகளில்). யாரோ ஒருவர் நம்மை வெற்றிபெறச் செய்வார்கள் என்பதை உணரும் அளவுக்கு நாங்கள் கிரிக்கெட் விளையாடிவிட்டோம். ஆனால் நான் பொய் சொல்ல விரும்பவில்லை. டிரஸ்ஸிங் ரூமில் பதற்றம் அதிகமாக இருந்தது. பேட்டிங் செய்வதற்கு கடினமான விக்கெட். இரண்டு இன்னிங்ஸிலும் எங்கள் மீது அழுத்தத்திற்கு உள்ளாக்கினர்.

பந்து மென்மையாக மாறியவுடன், ரன்கள் எடுப்பது எளிதாக இருந்தது. புதிய பந்தில் யார் சிறப்பாக விளையாடுகிறார்கள் என்பதுதான் பிரச்சினை. நாங்கள் நினைத்ததை விட சில விக்கெட்டுகளை இழந்தோம் ஆனால் நாங்கள் வேலையை முடித்தோம். எங்களிடம் நல்ல பவுலிங் அட்டாக் கடந்த பல வருடங்களாக நடந்து வருகிறது. சமீப வருடங்களில் நாங்கள் வெளிநாடுகளுக்கு எங்கு சென்றாலும், அந்த வேலையை சிறப்பாக செய்துள்ளோம்.” எனப் பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி!