Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்னிவீர் ராணுவ படையில் சேர விண்ணப்பிக்கலாம்..! – எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (12:26 IST)
மத்திய அரசு அறிவித்த அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணிபுரிய விண்ணப்பங்கள் பெறத் தொடங்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகால தற்காலிக பணிவழங்கும் அக்னிபத் திட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல பகுதிகளில் பலர் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு எழுந்தது. எனினும் இந்த திட்டத்தில் சேர்வதற்கான அறிவிப்புகளை இந்திய ராணுவம் வெளியிட்டது.

முன்னதாக இந்திய கடற்படை மற்றும் விமானப்படையில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்நிலையில் தற்போது ஜூலை 1 முதல் அக்னிவீர் ராணுவ பணி சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் பெற தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3 வரை இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்திய ராணுவத்தில் General Duty Agniveer, Tech Agniveer, Technical (Aviation/Ammunition Examiner)Agniveer, Clerk / Store Keeper, Technical Tradesmen ஆகிய பணிகளுக்கு அக்னிவீர் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதற்கான வயது வரம்பு 17.5 வயதிலிருந்து 23 வயதுவரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அக்னிவீர் திட்டத்திற்கான உடற்தகுதி குறித்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/Notification/863_1_AGNIVEER_RALLY_NOTIFICATION.pdf என்ற அறிவிப்பை படிக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments