Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அக்னிபத் சர்ச்சை; தெலுங்கானாவில் பற்றி எரியும் ரயில்! – தீவிரமடையும் போராட்டம்!

Train Fire
, வெள்ளி, 17 ஜூன் 2022 (11:07 IST)
அக்னிபத் ராணுவ பணி திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் தெலுங்கானாவில் ரயிலுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு அறிவித்துள்ள 4 ஆண்டுகால குறுகிய கால ராணுவ பணி வழங்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. நேற்று முதலாக இந்தியா முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் பீகாரில் பயணிகள் ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். உத்தர பிரதேசத்தில் போராட்டத்தில் காவலர்கள், போராட்டக்காரர்கள் இடையே வன்முறை வெடித்தது.

இந்நிலையில் இன்றும் நாடு முழுவதும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் தொடர்ந்து வருகிறது. நேற்று பீகாரில் ரயிலுக்கு தீ வைத்த நிலையில் இன்று தெலுங்கானாவின் செகந்திரபாத் ரயில் நிலையத்தில் நின்ற பயணிகள் ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். தொடர்ந்து நடந்து வரும் இந்த தீ வைப்பு சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எங்களுக்கு அவ்வளவு அதிகாரம் இல்ல..! – நளினி, ரவிச்சந்திரன் விடுதலை மனு தள்ளுபடி!