Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க காங்கிரஸ் கோரிக்கை

Webdunia
புதன், 29 ஆகஸ்ட் 2018 (19:31 IST)
பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி என்று ஆர்பிஐ அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

 
2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி இந்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இந்தியா முழுவதும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 
 
கையில் பணம் இருந்தும், வங்கி கணக்கில் பணம் இருந்தும் அன்றாட செலவுக்கே மிகவும் சிரமப்பட்டனர். இந்த நடவடிக்கையால் மக்களுக்கு மத்திய அரசு மீது கடும் கோபம் ஏற்பட்டது. 
 
இந்நிலையில் திரும்ப பெறப்பட்ட பணம் குறித்த தகவலை ரிசர்வ் வங்கி தனது வருடாந்திர அறிக்கையில் வெளியிட்டுள்ளது. அதில் இன்னும் ரூ.13,000 கோடி திரும்பவில்லை என்று தெரிவித்துள்ளது.
 
இதனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வையாக கருதப்படுகிறது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, கணக்கில் வராத 3 லட்சம் கோடி ரூபாய் பணம் நாட்டிற்கு திரும்பும் என்று பிரதமர் மோடிய கூறிய பொய்க்காக அவர் மன்னிப்பு கேட்பாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments