Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர்செல், ஏர்டெல்லை அடுத்து வோடோபோனுக்கும் சிக்கல்?

Webdunia
வெள்ளி, 16 மார்ச் 2018 (17:44 IST)
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்செல் திடீரென தனது சேவையை கடன் காரணமாக நிறுத்தி கொண்டதால் அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்துடன் தற்போது வேறு நிறுவன சேவைக்கு மாறியுள்ளனர். இந்த நிலையில் நேற்று திடீரென ஏர்டெல் வாடிக்க்கையாளர்களும் சிக்னல் கிடைக்காமல் அவதிப்பட்டனர். ஆனால் இது தற்காலிக பிரச்சனை தான், உடனே இந்த குறை நிவர்த்தி செய்யப்படும் என ஏர்டெல் நிறுவனம் விளக்கம் அளித்தது

இந்த நிலையில் இன்று காலை முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக சென்னையின் ஒருசில பகுதிகளில் வோடஃபோன் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஹோம் லோகேஷன் ரிஜிஸ்டர் குறித்த பிரச்னைதான் இது என்று தொலைத் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வோடஃபோன் நிறுவனம் தனது டுவிட்டரில் கூறியபோது,  "இதுவொரு தற்காலிக பிரச்னைதான். இந்த தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணிகள் நடைபெறு வருகின்றன. மிக விரைவில் வோடஃபோன் சேவை சீரடையும்" என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஜியோவின் வருகைக்கு பின் மற்ற தனியார் தொலைத்தொடர்பு துறைகள் ஆட்டம் கண்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் எந்த நேரத்தில் தங்கள் இணைப்பு கட் ஆகுமோ என்ற பயத்துடனே உள்ளனர். மொத்தத்தில் பி.எஸ்.என்.எல் சிம் தான் பாதுகாப்பானது என்று பலர் நினைக்கும் வகையில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments