அதானியின் துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு நடிகர் விஜயகாந்த் எதிர்ப்பு

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (15:07 IST)
ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஒரு நகரையோ, ஏரியையோ அழிப்பது தவறு என்று நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை  நகருக்கு அருகில்   தொழிலதிபர் அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கப் பணிகள் மேற்கொள்வதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

சென்னை  நகருக்கு அருகில்   தொழிலதிபர் அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில்,  ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஒரு நகரையோ, ஏரியையோ அழிப்பது தவறு என்று நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தன் சமூக வலைதள பக்கத்தில், ‘’காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்க,ம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக தற்போது அது குறித்து  வாய் திறக்காமல் இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘’கடல் வாழ் உயிரினங்கள், பறவைகள், மற்றும் லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அழித்து, மீஞ்சூர்- காடுபள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய இருப்பது அவசியமா? அதானியின் இந்த விரிவாக்கத் திட்டத்தை முழுமையாக ரத்து செய்து மத்திய மாநில, அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments