Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை இறக்குமதி செய்யும் சோனுசூட்!

ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை இறக்குமதி செய்யும் சோனுசூட்!
, செவ்வாய், 11 மே 2021 (07:26 IST)
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தினந்தோறும் மூன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தியாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் படுக்கைகள் கிடைப்பதும், அப்படியே படுகைகள் எடுத்தாலும் ஆக்சிஜன் சிலிண்டர் கிடைப்பதும் மிகவும் கஷ்டமாக உள்ளது 
 
இந்த நிலையில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்த போதிலும் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகளுக்கு இணையாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை நிலையாக உள்ளது 
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா நோயாளிகளுக்காக தனது சொந்த பணத்தில் கோடிக்கணக்கில் செலவு செய்து வரும் நடிகர் சோனு சூட் தற்போது ஆக்சிஜனுக்காகவும் ஒரு நிரந்தர தீர்வை எடுக்க முடிவு செய்துள்ளார்.
 
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகளை இறக்குமதி செய்ய அவர் முடிவு செய்யப்பட்டு உள்ளார். முதல் கட்டமாக ஒரு ஆக்சிஜன் ஆலை இந்தியா வர உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கங்கையில் மிதந்த 150 சடலங்கள்: கொரோனாவால் உயிரிழந்தவர்களா?