Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் தர்ஷனின் ஜாமீன் ரத்து! கைது செய்து சிறையிலடைக்க உத்தரவு! - உச்சநீதிமன்றம் அதிரடி!

Prasanth K
வியாழன், 14 ஆகஸ்ட் 2025 (11:29 IST)

ரேணுகாசாமி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமீனை உடனே ரத்து செய்ய உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

கன்னடத்தில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர்ஷன். இவர் நடிகை பவித்ரா கவுடாவை சமூக வலைதளங்களில் விமர்சித்த அவரது சொந்த ரசிகரான ரேணுகாசாமி என்பவரை தனது பண்ணை வீட்டிற்கு கொண்டு சென்று அடித்துக் கொன்று புதைத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். தர்ஷன் மட்டுமல்லாமல் நடிகை பவித்ரா கவுடா உள்பட 17 பேரை இந்த வழக்கில் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னதாக தர்ஷன், பவித்ரா உள்பட 17 பேருக்குமே ஜாமீன் வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மாநில அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

 

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகள் அனைவரையுமே ஜாமீனில் விட்டதை செல்லாது என அறிவித்துள்ளது. நடிகர் தர்ஷனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், உடனே தர்ஷனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொல்க்த்தா சட்டக்கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு: குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்..!

தன்னை மதிக்காமல் திருமணம்! மனைவி, மகனுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர்! - நெல்லையில் அதிர்ச்சி!

அயோத்தியில் மெழுகு அருங்காட்சியகம்.. ராமர், சீதா தேவி, லட்சுமணன், அனுமன் சிலைகள் வைக்க ஏற்பாடு..!

டெல்லி மெட்ரோ கட்டணம் திடீர் உயர்வு.. சென்னையிலும் உயர்த்தப்படுமா?

பங்குச்சந்தை இன்று மீண்டும் ஏற்றம்.. காளையின் பிடியில் இருப்பதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments