Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் முதல்வரின் ரத்த கசிவு நிறுத்தப்பட்டது..

Arun Prasath
திங்கள், 28 அக்டோபர் 2019 (11:35 IST)
கேரள முன்னாள் முதல்வருக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிசையளித்து வருகின்றனர்.

கேரளாவின் முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தம், கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி தனது 96 ஆவது வயதை நிறைவு செய்தார். கேரளா அரசியல் வரலாற்றில் மிகவும் ஆளுமை பெற்ற அவர், கடந்த வெள்ளிக்கிழமை உடல்நிலை கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறினர். அதன் பிறகு தீவிர சிகிச்சைக்கு பிறகு தற்போது ரத்த கசிவு நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

இது குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறுகையில், ”அவரது மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டது தெரியவந்தது. அவரது நரம்பு மண்டலம் தற்போது நிலையாக உள்ளது. தற்போது அவரை நெறுங்கிய உறவினர்கள் மட்டுமே பார்க்க அனுமதித்துள்ளோம்” என கூறியுள்ளார்.

மேலும் கேரள முதல்வர் பிரனாயி விஜயன், அச்சுதானந்தனை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments