Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாடா, அம்பானி கூட செய்யாத சாதனை.. ஒரே நேரத்தில் 50000 ஊழியர்களுக்கு பதவி உயர்வு..!

Siva
வெள்ளி, 23 மே 2025 (09:54 IST)
தொழில்நுட்ப நிறுவனமான அக்சென்ச்சர், 2024 ஜூன் மாதம் இந்தியாவில் சுமார் 15,000 பணியாளர்களுக்கு பதவி உயர்வு அளித்தது. இது உலகளாவிய பதவி உயர்வு நடவடிக்கையின் ஒரு பகுதி ஆகும். தற்போது இந்நிறுவனத்தின் உலகம் முழுவதிலும் உள்ள கிளைகளில் பணிபுரியும்50,000 பேர் இந்த பதவி உயர்வு பெற்று இருக்கிறார்கள்.
 
இந்த தகவலை இந்தியா மண்டலத்தின் மூத்த மேலாளர் அஜய் விஜ், ஊழியர்களுக்கு அனுப்பிய உள்ள மின்னஞ்சலில் கூறியுள்ளார். 2024-25 நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் 43,000க்கும் மேற்பட்டோர் பதவி உயர்வு பெறுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
2023 டிசம்பரில், சிலருக்கு அடிப்படை ஊதிய உயர்வுகள் வழங்கப்பட்டன. ஜூன் முதல் டிசம்பர் வரை, பெரும்பாலான இந்திய ஊழியர்களுக்கு இவ்வாறான ஊதிய உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
 
பதவி உயர்வு சுழற்சி 2024 செப்டம்பரில், டிசம்பரிலிருந்து ஜூனுக்கு திடீரென மாற்றப்பட்டது. இதன் நோக்கம், வாடிக்கையாளர் செலவுகள் மற்றும் சேவை தேவை பற்றிய தெளிவான பார்வை பெறுவதற்காக என அக்சென்ச்சர் கூறியுள்ளது.
 
அக்சென்ச்சர் இந்தியாவில் 3,00,000க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். உலகளவில் 7,74,000 பேர் பணியாற்றுகின்றனர். FY24-இல், நிறுவனம் USD 64.90 பில்லியன் வருமானம் ஈட்டியுள்ளது.
 
ஒரே வருடத்தில் 50000 பேருக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு அளிப்பது என்பது டாடா மற்றும் அம்பானி நிறுவனங்கள் கூட செய்யாத சாதனை என்று கூறப்பட்டு வருகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரை நிறுத்தியது நான்தான்! ஆனா க்ரெடிட் தர மாட்றாங்க! - தென்னாப்பிரிக்க அதிபரிடம் சீன் போட்ட ட்ரம்ப்!

குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்.. ஜாமின் வாங்கி கொடுத்த வக்கீல் குழந்தையும் கொலை..!

க்ரீன் கார்டு வைத்திருந்தாலும் வெளியேற்றலாம்.. அமெரிக்க நீதிமன்ற உத்தரவால் இந்தியர்கள் அதிர்ச்சி..!

தொடர் ஏற்றத்திற்கு பின் திடீரென சரிந்த தங்கம்.. இன்றைய சென்னை நிலவரம்..!

டாடா, அம்பானி கூட செய்யாத சாதனை.. ஒரே நேரத்தில் 50000 ஊழியர்களுக்கு பதவி உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments