Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குடிசை வீட்டில் சோலார் பேனல்: சட்டீஷ்கர் மாநிலத்தில் சாதனை

குடிசை வீட்டில் சோலார் பேனல்: சட்டீஷ்கர் மாநிலத்தில் சாதனை
, ஞாயிறு, 17 செப்டம்பர் 2017 (23:44 IST)
இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் மின்சாரத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் சோலார் பேனல் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வீடுகளில் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை மத்திய மாநில அரசுகள் பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகின்றன



 
 
இதன் விளைவாக சோலார் மின்சாரம் நகரங்களில் பெரிய தொழிற்சாலைகள், அடுக்குமாடி கட்டிடங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் சட்டீஷ்கர் மாநிலத்தில் பழங்குடி வகுப்பை சேர்ந்த ஒருவர் தனது குடிசை வீட்டில் சோலாரில் உற்பத்தியாகும் மின்சாரத்தை பயன்படுத்துகிறார்.
 
இவருக்கு டுவிட்டர், பேஸ்புக் தெரியாது, இண்டர்நெட் தெரியாது, ஆனால் சோலாரில் இருந்து மின்சாரம் எடுத்தால் எந்த அளவுக்கு நன்மை பயக்கும் என்பது மட்டும் தெரிந்துள்ளது. இவரை பின்பற்றி அனைவரும் சோலார் மின்சாரத்திற்கு மாற வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏபிசிடியே தெரியாது, இவரெல்லாம் நாட்டை எப்படி ஆள்வார்? கமலுக்கு சுப்பிரமணியன் சுவாமி கேள்வி