Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று ஏற்படும் சூரிய கிரகணம் வெறும் கண்களால் பார்க்கலாமா?

இன்று ஏற்படும் சூரிய கிரகணம் வெறும் கண்களால் பார்க்கலாமா?
, திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (12:40 IST)
சூரியன்-பூமி-சந்திரன் அனைத்தும் ஒரே நேர் கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படும். அது இன்று இரவு ஏற்படுகிறது. இந்தியாவில் தெரியாது என்றும் கூறப்படுகிறது.

 
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அது ஒரு அமாவாசை நாளன்று  ஏற்படும். சூரியன் முழுவதுமோ அல்லது ஒரு பகுதியோ மறைக்கப்படும் நிலையில் முழு சூரிய கிரகணம் இன்று (21/08/2017) திங்கள் கிழமை அமாவாசை தினத்தில் இரவு இந்திய நேரப்படி இரவு 9.15 முதல் இரவு 2.34 வரை தோன்றுகிறது.
 
இந்த அரிய சூரிய கிரகணம் சூரியனை சந்திரன் முழுவதும் மறைத்து 3 நிமிடங்கள் வரை கிரகணம் ஏற்படும். இந்த தகவலை  'நாசா' மையம் தெரிவித்துள்ளது. இது அமெரிக்காவில் 14 மாகாணங்களில் முழுமையாக தெரியும். இந்தியாவில் தெரியாது  எனவும் கூறப்படுகிறது.
 
சூரிய கிரகணத்தின்போது முக்கியமாக கர்ப்பிணி பெண்களை இது பாதிக்கும் எனவும், ஆன்மீக ரீதியாக கூறப்படும் போது,  சாப்பிடக்கூடாது, தண்ணீர் குடிக்கக்கூடாது, வீட்டில் சமையல் செய்யக்கூடாது, நகம் வெட்டக்கூடாது என சாஸ்திரங்கள்  கூறுகின்றன.
 
கிரகணத்தின்போது சாப்பிடக்கூடாது, உணவு கெட்டுப்போய்விடும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது. இதனை மகப்பேறு  நிலையில் உள்ள ஒரு பெண்மணியை வைத்து சோதனை செய்தபோது அவர்களுக்கு எந்தவிதமான தாக்கமும் இல்லை என்பது  நிரூபணமானதாக கூறப்படுகிறது.
 
இந்த சூரிய கிரகணம் 99 ஆண்டுகளுக்கு பிறகு வானில் ஒரு முழு சூரிய கிரகணம் தோன்ற உள்ளது. அதை வெறும் கண்களால்  பார்க்கக்கூடாது என நாசா மையம் அறிவுறுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காது மூக்கு தொண்டைக்கு ஆபரேசன் செய்யும் ரோபா