Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐயா.. யாராவது காப்பாத்துங்க..! – கோவில் ஜன்னலில் சிக்கிய திருடனின் கதறல்!

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (11:43 IST)
ஆந்திராவில் கோவிலில் கொள்ளையடிக்க சென்ற திருடன் ஜன்னலில் சிக்கிக் கொண்ட சம்பவம் வைரலாகியுள்ளது.

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் உள்ளது எல்லையம்மன் கோவில். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் சமீபத்தில்தான் திருவிழா நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு இந்த கோவிலுக்குள் கொள்ளையடிக்க திருடன் ஒருவன் புகுந்துள்ளான்.

ஜன்னல் கம்பிகளை நீக்கி உள்ளே புகுந்த திருடன் அம்மனின் தங்க நகைகள், உண்டியல் பணம் என எல்லாவற்றையும் மூட்டையாக கட்டிக் கொண்டு ஜன்னல் வழியாக வெளியேற முயன்றுள்ளான். ஜன்னலில் பாதி உடலை நுழைத்த நிலையில் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்ட திருடன் தொடர் முயற்சிகளால் சோர்ந்து அப்படியே தூங்கியுள்ளான்.

காலை கோவிலுக்கு வந்த மக்கள் ஜன்னலில் திருடன் சிக்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்களிடம் காப்பாற்றுமாறு திருடன் கெஞ்சவே ஜன்னலிலிருந்து வெளியே எடுக்க முயன்றுள்ளனர். இதற்கிடையே போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து ஜன்னலில் சிக்கிய திருடனை மீட்டு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

கணவர் இறந்தது தெரியாமல் 5 நாட்களாக ஒரே வீட்டில் வசித்த மனைவி.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

இல்லாத இடத்திற்கு விளம்பரம் செய்த மகேஷ்பாபு.. நுகர்வோர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்..!

நடிகை கார் மீது அரசியல்வாதி மகன் கார் மோதி விபத்து.. நடிகையின் சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments