Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2ம் வகுப்பு மாணவியை பெல்ட்டால் அடித்த ஆசிரியை: ரத்த காயங்களுடன் சிறுமி காவல்நிலையத்தில் புகார்

2ம் வகுப்பு மாணவியை பெல்ட்டால் அடித்த ஆசிரியை: ரத்த காயங்களுடன் சிறுமி காவல்நிலையத்தில் புகார்

2ம் வகுப்பு மாணவியை பெல்ட்டால் அடித்த ஆசிரியை: ரத்த காயங்களுடன் சிறுமி காவல்நிலையத்தில் புகார்
, வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (13:39 IST)
கர்நாடக மாநிலம், பெங்களூர், நெலமங்களா நகரை சேர்ந்த வெங்கடேஷ் என்பருடைய மகள் பாவனா (7)  அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறாள். பள்ளி முடிந்தவுடன் பாவனா ஒரு தனியார் டியூசனுக்கு சென்று வருகிறாள்.


 


இதனிடையே பாவனா நேற்று முன்தினம் வீட்டுப்பாடம் செய்யாமல் டியூசனுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த டியூசன் ஆசிரியை லதா, சிறுமியை கண்டித்ததோடு பெல்ட்டால் தாக்கியுள்ளார். இதனால் பாவனாவின் உடலில் ரத்த காயங்கள் ஏற்பட்டன.  

இது பற்றி பெற்றோரிடம் சிறுமி கூறியிருக்கிறாள்.  அதிர்ச்சி அடைந்த பாவனாவின் பெற்றோர் உடனே அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பிறகு, இதுதொடர்பாக டியூசன் ஆசிரியை லதா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தெரிந்த, டியூன் ஆசிரியை தலைமறைவாகிவிட்டார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லதாவை தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தெருக்களில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடிய திராட்சை ஒயின்