Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தெருக்களில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடிய திராட்சை ஒயின்

தெருக்களில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடிய திராட்சை ஒயின்

Advertiesment
தெருக்களில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடிய திராட்சை ஒயின்
, வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (13:19 IST)
பிரான்சின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது துறைமுக நகரமான சிடியில் உள்ள மெரிசெல் அவின்யூ பகுதியில் திடீரென்று திராட்சை ஒயின் பெருக்கெடுத்து ஓடியது.



தெருக்களில் எல்லாம் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரின் வாசம் திராட்சை மதுவுக்கு ஒப்பானதாக இருப்பதை அறிந்த மக்கள் பின்னர் அதை உறுதியும் செய்தனர். இது பல பகுதிகளில் அமைந்துள்ள வாகன நிறுத்தம் மற்றும் பல்வேறு பகுதிகளில் நிரம்பியதை அடுத்து குறிப்பிட்ட பகுதி மக்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ பகுதிக்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் தெருக்களில் பெருக்கெடுத்த திராட்சை மதுவை குழாய் வைத்து அப்புறப்படுத்தினர். சம்பவப்பகுதிக்கு வந்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில்,  பிரோன் எஸ்.ஏ என்பவருக்கு சொந்தமான திராட்சை மது ஆலையில் இருந்து இந்த மது பெருக்கெடுத்துள்ளது தெரியவந்தது.

அந்த ஆலையில் வைக்கப்பட்டிருந்த 5 பெரிய தொட்டிகளில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த மதுவை மர்மநபர்கள் சிலர் திறந்து விட்டுள்ளது விசாரணையின்போது தெரிய வந்துள்ளது. பெருக்கெடுத்த திராட்சை மதுவின் அளவு 50,000 லிட்டர் என கூறப்படுகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் சாதியற்றவன் ; சாதிக்குள் என்னை அடைக்க வேண்டாம் : இயக்குனர் ரஞ்சித் வேண்டுகோள்