Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரியில் சக மாணவியை எரித்த மாணவி

Webdunia
வியாழன், 25 மே 2023 (15:34 IST)
கேரளா மாநிலம் வெள்ளையணி வேளாண்மை கல்லூரி  இயங்கி வருகிறது. இங்கு சக மாணவியை மற்றொரு மாணவி தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

இங்குள்ள வெள்ளையணி வேளாண்மை என்ற விவசாய  கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவரை சக மாணவி கொடூரமாக  தீ வைத்து எரித்தார். இந்தச் சம்பவத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த வேறொரு மாணவி அவரை தீ வைத்துள்ளார்.

இந்த இரு மாணவிகளும் விடுதியில் ஒரே அறையில் தங்கியிருந்துள்ளனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக  கல்லூரி நிர்வாகம் 4 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் திருவல்லம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments