Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்பா மையம் பெயரில் விபசாரம்…60 பெண்கள் உள்பட 99 பேர் கைது

Webdunia
வியாழன், 25 மே 2023 (15:28 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் ஸ்பா மையம் என்ற பெயரில் விபசாரத்தில் ஈடுபட்ட 60 பெண்கள் உள்பட 99 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.  இங்குள்ள காசியாபாத் என்ற நகரில் பசிபிக் மால் பகுதியில், ஸ்பா மையங்கள் இயங்கி வருகின்றன.

இந்த ஸ்பா மையங்களில் விபசாரம் நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் சென்றுள்ளது.

இதையடுத்து,  போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு, ஸ்பா மையங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில், 8 ஸ்பா மையங்களில் இருந்து 60 பெண்கள் மற்றும் 38 ஆண்களை பிடித்துச் சென்று அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக துணை காவல் ஆணையாளர் விவேக் தெரிவித்துள்ளார்.

மேலும்,  ‘’ஸ்பா மையங்களின் மேலாளர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு எதிராக பாலியல் சுரண்டல் தடுப்புச் சட்டம் 1950ன் கீழ் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகத்’’ தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்