Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குலாம்நபி ஆசாத் தலைமையில் தனிக்கட்சி ? ஜி23 அதிருப்தி தலைவர்கள் ஆலோசனை!

Advertiesment
குலாம்நபி ஆசாத் தலைமையில் தனிக்கட்சி ? ஜி23 அதிருப்தி  தலைவர்கள் ஆலோசனை!
, செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (22:04 IST)
சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் மற்றும் காங்கிரஸ் அதிருப்திதலைவர்கள் இணைந்து புதிய கட்சி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

 காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகுவதாக அறிவித்து கட்சியின் அடிப்படைபொறுப்புகளில் இருந்து விலகி பிரதமர் மோடி மனித நேயமானவர் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில்,  காங்கிரஸ் கட்சியில் ஜி23 என அழைக்கப்படும் அதிருப்தி தலைவர்கள்3 பேர் இன்று டில்லியில் உள்ள குலாம் நபி ஆசாத்தின் வீட்டில் ஆலோசனை செய்ததாகவும், காங்கிரஸ் கட்சிக்கு வரும் அக்டோபர் 17 ஆம் தேதி நடக்கவுள்ள தேர்தலுக்கு முன் குலாம் அபி ஆசாத் தனிக்கட்சி தொடங்கவுள்ளதாகவும், அவருக்கு மற்ற தலைவர்களும் ஆதரவு வழங்கலலாம் எனக் கூறப்படுகிறது.

இது கட்சித் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அதிகார போதை: அன்னா ஹசாரே கண்டனம்!