Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீசாருக்கு ரோஜாப்பூ கொடுத்த போராட்டம் செய்த மாணவி: வைரலாகும் புகைப்படம்

Webdunia
வியாழன், 19 டிசம்பர் 2019 (20:13 IST)
சமீபத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் குடியுரிமை சீர்திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றது. இந்த நிலையில் இந்த சட்டத் திருத்தத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் மாணவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். டெல்லி உள்பட ஒருசில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் அளவிற்கு இந்த போராட்டம் தீவிரமாகி உள்ளது
 
இந்த நிலையில் மாணவர்களில் பெரும்பாலானோர் அறவழியில் போராடி வருவதாகவும் ஒரு சில இடங்களை தவிர மற்ற இடங்களில் எந்தவித வன்முறையும் இல்லாமல் தங்கள் கோஷங்களை மட்டுமே மாணவர்கள் எழுப்பி தங்களுடைய கோரிக்கைகளை தெரிவித்து வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகி வருகிறது 
 
இந்த நிலையில் டெல்லியில் மாணவர்கள் போராட்டம் செய்த இடத்திற்கு போலீசார்கள் வந்தபோது அங்கு போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவி ஒருவர், சிவப்பு ரோஜாவை போலீசாரிடம் கொடுத்துள்ளார். போலீசாக இருந்தாலும் அன்பை பரிமாறுங்கள் என்று அவர் கூறியுள்ளது அனைத்து போலீசாரையும் நெகிழ வைத்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments