Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நளினி உள்பட 6 பேர் விடுதலை: உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு!

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (07:56 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே. அவர்களில் நளினி முருகன் உள்பட 6 பேர் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் நளினி உள்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளுமா என்பது இன்று தெரியும்
 
நளினி உள்ளிட்ட 6 பேர் 30 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை ஆகி தங்கள் சொந்த நாட்டிற்கு செல்ல திட்டமிட்டுள்ள நிலையில் இந்த சீராய்வு மனு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments