Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நளினி உள்பட 6 பேர் விடுதலை: உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு!

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (07:56 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே. அவர்களில் நளினி முருகன் உள்பட 6 பேர் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் நளினி உள்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளுமா என்பது இன்று தெரியும்
 
நளினி உள்ளிட்ட 6 பேர் 30 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை ஆகி தங்கள் சொந்த நாட்டிற்கு செல்ல திட்டமிட்டுள்ள நிலையில் இந்த சீராய்வு மனு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments