Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

7 பேர் விடுதலையை எதிர்த்து சீராய்வு மனு: முன்னாள் முதல்வர் அதிரடி பேட்டி

7 releses
, திங்கள், 14 நவம்பர் 2022 (16:40 IST)
7 பேர் விடுதலையை எதிர்த்து சீராய்வு மனு: முன்னாள் முதல்வர் அதிரடி பேட்டி
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 7 பேர் விடுதலையை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என முன்னாள் முதல்வர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு காரணமாக விடுதலை செய்யப்பட்டனர் 
 
இந்த நிலையில் 7 பேர் விடுதலைக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் புதுவை முதல்வர் நாராயணசாமி இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்
 
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 7 பேர் விடுதலையை எதிர்த்து மறுசீராய்வு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு மத்திய அரசு தாக்கல் செய்யாவிட்டால் காங்கிரஸ் கட்சி சீராய்வு மனு தாக்கல் செய்யும் என்று முன்னாள் புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார் 
 
தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி அவர்களும் 7 பேர் விடுதலை யை எதிர்த்து வரும் நிலையில் முன்னாள் புதுவை முதல்வரும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேருந்து படியில் நின்று பயணம் செய்த மாணவன் பலி!