Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாத்ரூம் என நினைத்து விமானத்தின் கதவை திறந்த பயணி

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (12:02 IST)
விமானத்தில் பாத்ரூம் என நினைத்து பயணி ஒருவர் விமானத்தின் பின் கதவை திறக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் இருந்து பாட்னாவிற்கு கோ ஏர் விமானம் சென்று கொண்டிருந்தது. சுமார் 150 பயணிகளை ஏற்றிக்கொண்டு அந்த விமானம் சென்றது. அப்போது விமானத்தில் பயணித்த 27 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் விமானத்தின் பின் பகுதிக்கு சென்று விமானத்தின் பின் கதவை திறக்க முற்பட்டார். அப்போது அங்கு சென்ற சக பயணி ஒருவர் கூச்சலிட்டார்.
 
உடனடியாக அங்கு வந்த விமான ஊழியர்கள் ஏன் இப்படி செய்தீர்கள் என அந்த பயணியிடம் கேட்டனர். இது பாத்ரூம் கதவு என நினைத்து தெரியாமல் செய்துவிட்டேன் என மன்னிப்பு கோரினார். இதனை யாரும் கவனிக்காமல் இருந்திருந்தால் பெரிய விபத்து நேர்ந்திருக்கும்.
 
அந்த நபர் முதல்முறையாக விமானத்தில் பயணம் செய்ததால் பாத்ரூம் எங்கிருக்கிறது என தெரியாமல் அவர் இப்படி செய்திருப்பதாக அவரை விசாரித்த பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

பாஜக ஆட்சியில் மிகப் பெரிய ஊழல்.! ஆட்சிக்கு வந்ததும் விசாரிப்போம்..! ராகுல் காந்தி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments