Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாத்ரூம் என நினைத்து விமானத்தின் கதவை திறந்த பயணி

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (12:02 IST)
விமானத்தில் பாத்ரூம் என நினைத்து பயணி ஒருவர் விமானத்தின் பின் கதவை திறக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் இருந்து பாட்னாவிற்கு கோ ஏர் விமானம் சென்று கொண்டிருந்தது. சுமார் 150 பயணிகளை ஏற்றிக்கொண்டு அந்த விமானம் சென்றது. அப்போது விமானத்தில் பயணித்த 27 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் விமானத்தின் பின் பகுதிக்கு சென்று விமானத்தின் பின் கதவை திறக்க முற்பட்டார். அப்போது அங்கு சென்ற சக பயணி ஒருவர் கூச்சலிட்டார்.
 
உடனடியாக அங்கு வந்த விமான ஊழியர்கள் ஏன் இப்படி செய்தீர்கள் என அந்த பயணியிடம் கேட்டனர். இது பாத்ரூம் கதவு என நினைத்து தெரியாமல் செய்துவிட்டேன் என மன்னிப்பு கோரினார். இதனை யாரும் கவனிக்காமல் இருந்திருந்தால் பெரிய விபத்து நேர்ந்திருக்கும்.
 
அந்த நபர் முதல்முறையாக விமானத்தில் பயணம் செய்ததால் பாத்ரூம் எங்கிருக்கிறது என தெரியாமல் அவர் இப்படி செய்திருப்பதாக அவரை விசாரித்த பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான்கான் மகன்கள் பாகிஸ்தானில் நுழைய தடையா? 2 வார்த்தைகளால் ஏற்பட்ட சிக்கல்..!

2011 தேர்தலை போல் 2026 தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் திமுக இழக்கும். அதிமுக சரவணன்..!

விஜய்க்கு தனி விமானம் வாங்கி கொடுத்ததே பாஜக தான்.. சபாநாயகர் அப்பாவு

இப்பவாச்சும் பேசினாரே.. ரஜினிகிட்ட போன்ல பேசி தேங்க்ஸ் சொன்னேன்: அமைச்சர் துரைமுருகன்

தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு கொலை மிரட்டலா? அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments