Webdunia - Bharat's app for daily news and videos

Install App

65 லட்சம் வரதட்சணை: மனைவியை நிர்வாணமாக போட்டோ எடுத்து மிரட்டிய கணவன்

Webdunia
புதன், 5 செப்டம்பர் 2018 (15:18 IST)
ஆந்திராவில் 65 லட்சம் வரதட்சணையாக பெற்ற நபர் ஒருவர் தனது மனைவியை நிர்வாணமாக போட்டோ எடுத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம்  கர்னூல் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத் என்பவனுக்கு சமீபத்தில் திரிவேணி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அவனுக்கு திருமணத்தின் போது மணமகள் வீட்டார் 55 லட்சம் ரொக்கம், 10 லட்சம் மதிப்புள்ள நகைகளை வரதட்சணையாக கொடுத்தனர்.
 
இந்நிலையில் அந்த கொடூரன் திரிவேணியை நிர்வாணமாக போட்டோ எடுத்ததுடன், உன்னுடன் வாழ முடியாது. ஆகவே நான் சொல்லும் விவாகரத்துப் பத்திரத்தில் நீ கையெழுத்திட வேண்டும் என்றும், அதற்கு மறுத்தால் உன் நிர்வாணப் போட்டோவை இணையத்தில் வெளியிடுவேன் என்றும் மிரட்டியுள்ளான். இதற்கு அந்த அயோக்கியனின் பெற்றோரும் உடந்தை.
 
இந்நிலையில் திரிவேனி இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தான் கொடுத்த 55 லட்சம் ரொக்கம், 10 லட்சம் மதிப்புள்ள நகைகளை, தனது படிப்பு சான்றிதழ்களை பெற்றுத் தரும்படி கோரிக்கை விடுத்தார்.
 
புகாரின் பேரில் போலீஸார் அந்த அயோக்கியன் ராஜேந்திர பிரசாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments