Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனைவி - நண்பன் உல்லாசம்: வீடியோ எடுத்து பழிதீர்த்த கணவன்

மனைவி - நண்பன் உல்லாசம்: வீடியோ எடுத்து பழிதீர்த்த கணவன்
, வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (19:04 IST)
மகாராஷ்டிராவில் மனைவியை மிரட்டுவதற்காக, அவளை அவனது நண்பருடன் உல்லாசமாக இருக்க வைத்து அதனை வீடியோ எடுத்த கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 
 
மகாராஷ்டிரா மாநிலம் பன்வெல் நகரை சேர்ந்தவர் ரஜேஷ். இவருக்கு திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மனைவி தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். 
 
இந்நிலையில், குறிப்பிட்ட நாள் அன்று தனது மனைவிடம் உன்னுடன் தனியாக பேச வேண்டும் என கூறி அழைத்துள்ளார். அதன்படி இருவரும் பேசிக்கொண்டிருந்த போது, மனைவிக்கு குளி பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்துள்ளார். 
 
இதன் பின்னர் தனது மனைவி சுயநினைவை இழந்த பின்னர், தனது நண்பரை அவருடன் உல்லாசமாக இருக்க வைத்துள்ளார். இதனை வீடியோவாகவும் பதிவு செய்து வைத்துக்கொண்டார். 
 
இதன்பின்னர், இந்த வீடியோவை வைத்து தனது மனைவியை மிரட்டி வந்துள்ளார். மேலும், இதனை வெளியே கூறினால் இதனை வீடியோவை இணையத்தில் வெளியிடுவதகாவும் கூறி மிரட்டியுள்ளார். வேறு வழியின்றி மனைவியும் கணவரின் மிரட்டலுக்கு பயந்து இருந்துள்ளார். 
 
ஆனால், ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி இது குறித்து தனது சகோதரியிடம் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் இந்த சம்பவம் குறித்த போலீஸாரிடம் புகார் கொடுக்கப்பட்டு, அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய ஆளுநர் எங்கள் ஆதரவாளர்: ஜம்மு மாநில பாஜக தலைவர்