Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா நோயாளிகள் தங்கியிருந்த ஹோட்டலில் தீவிபத்து: உயிரிழப்பு குறித்த அதிர்ச்சி தகவல்!

Webdunia
ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (08:09 IST)
கொரோனா நோயாளிகள் தங்கியிருந்த ஹோட்டலில் தீவிபத்து:
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மட்டுமின்றி புதிய உச்சத்தையும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அளவாகவும் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது 
 
கடந்த மார்ச் மாதம் முதல் நான்கு மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட போதிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சுகாதாரத்துறையினர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது 
 
இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் கொரனோ நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டல் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் கொரோனா நோயாளிகள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்படுவதற்காக மருத்துவமனையில் இடமில்லாததால் கொரோனா நோயாளிகள் சிலர் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் ஆந்திர மாநிலம் விஜயவாடா என்ற நகரில் கொரோனா நோயாளிகள் ஒரு தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர் அந்த ஓட்டலில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்தது 
 
இந்த தீவிபத்தில் ஹோட்டலில் தங்கியிருந்த கோரானோ நோயாளிகளில் 4 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன. நோயாளிகள் தங்கியிருந்த ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே பொருத்தமாக இருக்கும்: பாஜக

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments