Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகன் ஓடியதால் மருமகளை திருமணம் செய்துகொண்ட மாமனார்

மகன் ஓடியதால் மருமகளை திருமணம் செய்துகொண்ட மாமனார்
, செவ்வாய், 9 அக்டோபர் 2018 (14:13 IST)
பீகாரில் கடைசி நேரத்தில் மணமகன் ஓடியதால் மருமகளை மாமனார் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் சமஷ்டிபூரை சேர்ந்தவர் ரோசன் லால். ரோசன் லால் தனது மகனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார். அதன்படி தன் மகனுக்கு சுவப்னா(21) என்ற பெண்ணை பார்த்து அவருடன் திருமணம் செய்துவைக்க முடிவு செய்தார் ரோஷன். இதனைத் தொடர்ந்து திருமண நிச்சயமும் நடைபெற்றது.
 
இந்நிலையில் நேற்று முன் தினம் ரோஷன் மகனுக்கும், சுவப்னாவிற்கும் திருமணம் நடைபெற இருந்தது. திருமண வீடே விழா கோலம் பூண்டது போல் காட்சியளித்தது. இரு வீட்டாரும் திருமண வேலைகளை செய்து கொண்டிருந்தனர். யாரும் எதிர்பாராத விதமாக கடைசி நேரத்தில் மணமகன் மண்டபத்தில் இருந்து ஓடிவிட்டார். விசாரித்ததில் மணமகன் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அவருடன் ஓடிவிட்டதாகவும் தெரியவந்தது.
 
இதனையடுத்து குடும்ப மானம் போகக்கூடாது என்பதற்காக சுவப்னாவின் தந்தை  தனது மகளை, அவரின் மாமனாரான ரோஷன் லாலுக்கு திருமணம் செய்துவைத்தார். மகள் வயது பெண்ணை மாமனார் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நக்கீரன் கோபாலுக்கு மருத்துவ சோதனை- ஸ்டாலின் மருத்துவமனை வருகை