Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடி போதையில் மகள்: கொன்று போட்ட அப்பா

Webdunia
வியாழன், 6 ஜூன் 2019 (18:35 IST)
உத்தர பிரதேசத்தில் மது குடித்துவிட்டு வந்த மகளை கோபத்தில் கொன்று போட்ட தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தர பிரதேசம் முசாஃபர்நகரை சேர்ந்தவர் வீர்பால். இவருக்கு 22 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இவர் அடிக்கடி வீட்டிற்கு மது அருந்திவிட்டு வந்ததால் அவரது அப்பா அவரை கண்டித்ததாக தெரிகிறது. இந்நிலையில் ஒருநாள் வீர்பாலின் மகள் கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் அதிகம் மது குடித்திருந்ததாக கூறப்படுகிறது. அதிகமான போதையில் அவர் கால்வாயில் தவறி விழுந்திருக்கலாம் என கூறி அதை யாரும் பெரிதுபடுத்தவில்லை.

அந்த பெண்ணுக்கு அர்ஜுன் சிங் என்றொரு காதலர் இருந்திருக்கிறார். அவர் வீர்பாலின் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக போலீஸில் புகார் அளித்துள்ளார். போலீஸ் விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட வீர்பால் தன் மகள் அதிகம் மது அருந்தியதால் தனக்கு அவமானமாக இருந்ததாகவும், குடும்ப மானத்தை காக்க மகளை கால்வாயில் தள்ளிவிட்டு கொன்றதாகவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments