Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக தேர்தல் அலுவலகத்திற்குள் நாகப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு

Webdunia
சனி, 13 மே 2023 (14:36 IST)
பாஜக தேர்தல் அலுவலகத்திற்குள்  நாகப்பாம்பு புகுந்ததால் அங்கு இருந்த பாஜகவினர் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். 

கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்ற நிலையில், இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே போட்டி இருந்த நிலையில், இன்றைய வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 132 இடங்களிலும், பாஜக 66 இடங்களிலும், மஜத 22 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

எனவே, காங்கிரஸ் 132 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. இதை அக்கட்சியினர்  நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், ஷங்கான் தொகுதியில் பாஜக தேர்தல் அலுவலகத்திற்குள்  நாகப்பாம்பு புகுந்ததால் அங்கு இருந்த பாஜகவினர் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். 

இதுபற்றி வனத்துறைக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த அவர்கள் பாம்பை பிடித்தனர்.

இதனால் அங்குப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’கிங்டம்’ தமிழர்களுக்கு எதிரான படமா? தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்..!

அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் போடலாம்.. வழக்கு போட்ட சிவி சண்முகத்திற்கு அபராதம்.. சுப்ரீம் கோர்ட்..!

ரக்‌ஷாபந்தன்: பிரதமர் மோடிக்கு 30 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்!

30 ஆயிரம் கிராமங்களில் இருந்து 50 ஆயிரம் விளையாட்டு வீரர்கள்! - களைகட்டும் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள்!

சரியாக 9:30 மணிக்கு அலுவலகம் வர வேண்டும்: பள்ளி குழந்தைகளை போல் நடத்தும் கார்ப்பரேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments