Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு... முதல்வர் பதவிக்கு சிக்கலா?

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு... முதல்வர் பதவிக்கு சிக்கலா?

Siva

, வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (17:11 IST)
கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பதை அடுத்து அவருடைய பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நில முறைகேடு வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்ய கவர்னர் ஒப்புதல் வழங்கியதை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா வழக்கு தொடர்ந்தார். ஆனால் இந்த வழக்கில் முதல்வர் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது  லோக் ஆயுக்தா காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் சித்தராமையா தார்மீக ரீதியாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜகவினர் தெரிவித்துள்ள நிலையில் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்றும் சட்டப்படி வழக்கை எதிர் கொள்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நில முறைகேடு வழக்கில் சித்தராமைய்யா, அவருடைய மனைவி பார்வதி, மைத்துனர் ஆகிய மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மலை மேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா!