Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தெறிக்கவிட்ட வேட்பாளர்: ஓட்டுக்காக குழந்தைக்கு ஆய் கழுவிவிட்டு அலப்பறை

தெறிக்கவிட்ட வேட்பாளர்: ஓட்டுக்காக குழந்தைக்கு ஆய் கழுவிவிட்டு அலப்பறை
, செவ்வாய், 27 நவம்பர் 2018 (15:20 IST)
தெலிங்கானாவில் வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் வேட்பாளர் ஒருவர் குழந்தைக்கு ஆய் கழுவிவிட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தெலிங்கானாவில் தேர்தல் நடைபெற உள்ளதால் பல்வேறு கட்சிகள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. ஓட்டுகளை பெற வேட்பாளர்கள் பல்வேறு ட்ரிக்குகளை கையாண்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் தெலிங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஒருவர் வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் ஒரு குழந்தை வீட்டின் முன்பு இயற்கை உபாதைகள் கழித்துக்கொண்டிருந்தது.
 
இதனைப்பார்த்த அமைச்சர் குழந்தை அருகே சென்று குழந்தைக்கு ஆய் கழுவிவிட்டார். அப்போது அவருக்கு அருகே ஜால்ராக்கள் ஜெய் தெலிங்கானா என முழக்கமிட்டனர். இது இணையத்தில் வெளியாகி இந்த செயலை செய்த வேட்பாளரை பலர் கலாய்த்து வருகிறார்கள்.
 
ஏற்கனவே வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் ஷேவிங் செய்து விடுவது, குளிக்க வைப்பது, சமைத்து தருவது போன்ற அட்ராசிட்டிகளை செய்து வந்த வேட்பாளர்களே இந்த வேட்பாளரின் செயலைக் கண்டு நமக்கே டஃப் கொடுக்க ஒருத்தன் வந்துவிட்டான் 
என அதிர்ந்து போய்விட்டனராம். 
 
இன்னும் அடுத்தடுத்து என்ன அட்ராசிட்டிகளை செய்ய காத்திருக்கிறார்களோ? இந்த ஈடுபாடு ஏன் ஜெயிச்ச பிறகும் பலருக்கு வருவதில்லை என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மர்மம் நிறைந்த அந்தமான்தீவு ஒரு பார்வை…