Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எனக்கு ஓட்டு போடலனா செத்து போய்டுவேன்: புது டைப்பா ஓட்டு கேட்ட பாஜக வேட்பாளர்

எனக்கு ஓட்டு போடலனா செத்து போய்டுவேன்: புது டைப்பா ஓட்டு கேட்ட பாஜக வேட்பாளர்
, திங்கள், 26 நவம்பர் 2018 (10:26 IST)
ராஜஸ்தானில் பாஜக வேட்பாளர் ஒருவர் தனக்கு ஓட்டு போடாவிட்டால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வேன் என மக்களை மிரட்டியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் வரும் 7-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக பல்வேறு கட்சியினர் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் நிம்பஹாரா தொகுதியின் பாஜக வேட்பாளரான பாஜக அமைச்சர் ஸ்ரீசந்த் கிருபலானி, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அவர் மக்களிடம் இந்த தேர்தலில் நீங்கள் எனக்கு ஓட்டுபோட்டு என்னை வெற்றிபெற செய்யவில்லை என்றால் நான் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வேன் என பேசினார். இதனால் அங்கிருந்த மக்கள் அதிர்ந்துபோனார்கள்.
 
இதுகுறித்து விளம்மகளித்த அவர், இது என் மக்கள் என்ற உரிமையில் பேசினேன் என கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டாலின் சென்ற விமானத்தை தடுத்து நிறுத்திய உடும்பு