Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10000 ரூபா கொடுத்தா தான் ட்ரீட்மெண்ட் - மருத்துவரின் வக்கிர புத்தியால் உயிரிழந்த சிறுவன்

Webdunia
திங்கள், 9 ஜூலை 2018 (08:53 IST)
உத்திரபிரதேசத்தில் லஞ்சம் கொடுத்தால் தான் சிகிச்சை அளிக்க முடியும் என்று மருத்துவர் கூறியதால் ஒரு அப்பாவி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்டுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டம் பால கிஷான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தராம்பால். இவரது 10 வயது மகனுக்கு உடல் நிலை சரியில்லாததால், அவனை தராம்பால் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிறுவனின் உடல்நிலை மேலும் மோசமடையவே அங்கிருந்த மருத்துவர்களை சிறுவனை மேல் சிகிச்சைக்காக பரேலி மருத்துவமனையில் சேர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
 
அதன்பேரில் தராம்பால் தனது மகனை பரேலி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கிருந்த மருத்துவர்கள், தராம்பாலிடம் உன் மகனுக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென்றால் எங்களுக்கு 10000 ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்றனர். மேலும் செலிவியருக்கும் ரூ.500-ம் தரகோரி கேட்டனர். அதனை கட்ட முடியாததால் தராம்பாலின் மகன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுகுறித்து தராம்பால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments