Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய்லாந்து குகையிலிருந்து 4 சிறுவர்கள் மீட்பு - மீட்புப்பணிகள் மேலும் தீவிரம்

Webdunia
திங்கள், 9 ஜூலை 2018 (08:34 IST)
கடந்த 15 நாட்களாக தாய்லாந்து குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்களில் 4 சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தாய்லாந்தில் கடந்த மாதம் 23-ம் தேதி 12 கால்பந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளர் மலையேற்ற பயிற்சிக்காக லுவாங் மலைப்பகுதிக்கு சென்றனர். அப்போது பெய்த கனமழையின் காரணமாக அவர்கள் மலையின் குகைக்குள் ஒதுங்கியுள்ளனர். கனமழையின் காரணமாக அவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டனர்.
10 நாட்களுக்கு பிறகு குகையில் சிக்கி கொண்டிருந்த கால்பந்து அணியின் சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனாலும் அவர்களை மீட்கும் பணி மிகவும் சிரமமாக கருதப்பட்டது. இதில் ஒரு பாதுகாப்பு வீரர் பலியானார்.
 
இந்நிலையில் நேற்று குகைக்குள் சிக்கியிருந்தவர்களில் 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீதமுள்ளவர்களையும் பத்திரமாக மீட்க, மீட்புப் படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments