Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகத்தில் பாஜக பிரமுகர் சரமாரியாக வெட்டிக்கொலை

Webdunia
சனி, 23 ஜூன் 2018 (11:42 IST)
கர்நாடகாவில் பா.ஜ.க. நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்மகளூரைச் சேர்ந்தவர் அன்வர்(44). இவர் சிக்மகளூர் புறநகர் பா.ஜ.க. பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்தார். இவர் சமீபத்தில் கர்நாடகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சிக்காக பல பணிகளை மேற்கொண்டார்.
 
இந்நிலையில் அன்வர் நேற்றிரவு கவுரி கால்வாய் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அன்வரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்த அன்வர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இதையடுத்து தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அன்வரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்துள்ள போலீஸார் கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 4858 பறக்கும் படைகள் தயார்..!

பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி.. ஓட்டுனர் அலட்சியம் காரணமா?

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments