Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடிப்பாவி இதுக்காகவா 5 பேர அநியாயமா கொன்ன - போலீஸையே அலறவிட்டுட்டியே!

Webdunia
சனி, 23 ஜூன் 2018 (11:18 IST)
மகாராஷ்டிராவில் விருந்தில் உணவருந்திய 4 குழந்தைகள் உட்பட 5 பேர் பலியாகிய சம்பவத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் காலாப்பூர் அருகே உள்ள மகத் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் மானே. இவர் ஒரு புது வீட்டை கட்டினார்.  
 
இந்நிலையில் சுபாஷ் வீட்டின் கிரகப்பிரவேசத்தின்போது விருந்தில் உணவருந்தியவர்ளுக்கு தலைசுற்றல், வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவர்கள் அருகிலிருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி 4 குழந்தைகள்  உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர். 
இந்த சம்பவம் குறித்து காலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சுபாஷ் மானேவின் உறவுக்காரப் பெண்ணான பிரத்னியா குடும்ப சண்டையின் காரணமாக விருந்து சாப்பாட்டில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ந்துபோன போலீஸார், அந்த பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments