Webdunia - Bharat's app for daily news and videos

Install App

16 நாள் கைக்குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு

Webdunia
ஞாயிறு, 1 ஏப்ரல் 2018 (10:27 IST)
ஒடிசாவில் பிறந்து 16 நாளே ஆன கைக்குழந்தையை குரங்கு ஒன்று தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடமாநிலங்களில் குரங்குகள் அதிகமாக காணப்படுவது வழக்கம். அதேபோல் குரங்குகளால் ஏற்படும் பிரச்சனையும் அதிகம். மக்களின் உடைமைகளை சேதப்படுத்தியும், தூக்கிச் செல்வதுமாய் குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன. சில சமயம் அது மக்களை தாக்கவும் செய்கிறது.
இந்நிலையில் ஒடிசாவில் கட்டாக் மாவட்டத்தில் பிறந்து 16 நாளே ஆன குழந்தை ஒன்று வீட்டில் தனது அம்மாவுடன் தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது வீட்டிற்குள் புகுந்த குரங்கு குழந்தையை தூக்கிக் கொண்டு காட்டிற்குள் ஓடிவிட்டது.
 
இதனையடுத்து தீயணைப்பு துறையினரும், வனத்துறை அதிகாரிகளும் காட்டுப் பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோம் மருத்துவமனையில் போப்பாண்டவர் அனுமதி.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கிளாம்பாக்கம் வரை 13 மெட்ரோ ரயில் நிலையங்கள்.. திட்ட அறிக்கை தயார்..!

திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் ஏன் பேரணி? ஐகோர்ட் கண்டனம்..!

பாம்பன் ரயில் பாலம் இயக்கப்படுவது எப்போது? தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வாட்ஸ் அப் செயலியுடன் இன்ஸ்டாகிராம் இணைப்பு.. விரைவில் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments