Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8,356 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8,356 ஆக உயர்வு
, ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (08:52 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8,356 ஆக உயர்வு
இந்தியாவில் கடந்த இரண்டு வாரங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தும் நாள்தோறும் நூறு இருநூறு என கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருந்தது
 
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 827 பேர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனையடுத்து நேற்று வரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,529 ஆக இருந்தது இந்த நிலையில் தற்போது அது 8356ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 242 ஆக இருந்த நிலையில் தற்போது 273ஆக உயர்ந்து உள்ளது என்பதும் இதனையடுத்து கடந்த 24 மணி ஒரே நாளில் 31 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 716 பேர் குணம் அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா மிக வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பை பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் மிக விரைவில் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா ! பலியான இந்தியர்கள் எவ்வளவு?