Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை பீனிக்ஸ் மால் சென்ற மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று!

சென்னை பீனிக்ஸ் மால் சென்ற மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று!
, ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (08:37 IST)
பீனிக்ஸ் மால் சென்ற மேலும் ஒருவருக்கு கொரோனா
சென்னை பினிக்ஸ் மாலில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த மாலுக்கு மார்ச் 10 முதல் 17 வரை வந்த சுமார் 3,300 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இருப்பினும் அவர்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டது
 
ஆனால் திடீரென கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை பீனிக்ஸ் மாலுக்கு சென்ற ஒரு தம்பதிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி அறிவித்தது. இதனால் சென்னை பீனிக்ஸ் மாலுக்கு சென்ற நான்கு பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதியானது 
 
இந்த நிலையில் தற்போது ஃபீனிக்ஸ் மாலுக்கு சென்ற மேலும் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நேற்று 58 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தலைமைச் செயலாளர் கூறியிருந்தார். இவர்களில் ஒருவர் சென்னை பீனிக்ஸ் மால் சென்றவர் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
செஞ்சி பகுதியை சேர்ந்த இவருக்கு கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து இவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் மொத்தம் 182 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் இவர்களில் 51 பேர் ராயபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் 166 பேருக்கு கொரோனா: தமிழகத்தை முந்தியது டெல்லி