Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை

Webdunia
சனி, 23 டிசம்பர் 2017 (11:52 IST)
குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தினால் 7 ஆண்டு விதிக்க தண்டனை விதிக்க மத்திய அரசு புதிய சட்டம் உருவாக்கியுள்ளது. 

குடிபோதையில் வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தற்பொழுது இருக்கும் சட்டத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தினால் 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராத தொகை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து தற்பொழுது மத்திய அரசு, மோட்டார் வாகன சட்டத்தை மாற்றி அமைத்து அதில் திருத்தம் செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. அதன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தி உயிரிழப்பு நேரிட்டால் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். இதுபோல் கடுமையான சட்டங்களை கொண்டு வருவதன் மூலம் குடிபோதையால் ஏற்படும் விபத்துகள் குறைய வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments