Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நேர்கோட்டில் 7 கோள்கள்.. நாளை வானில் நடக்கும் அதிசயம்..!

Siva
திங்கள், 20 ஜனவரி 2025 (08:02 IST)
ஒரே நேர்கோட்டில் ஏழு கோள்கள் தோன்றும் அதிசய நிகழ்ச்சி நாளை வானில் நடக்க இருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். ஏழு கோள்களும் அதன் சுற்றுப் பாதைகள் ஒரே டிகிரிக்குள் வருவதால் ஒரே நேர்கோட்டில் அந்த கோள்கள் இருப்பதை நம்மால் காண முடியும் என்றும் இந்த தலைமுறையினர் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்றும் விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன்,  யுரேனஸ், புதன் ஆகிய 7 கோள்கள் நாளை அதாவது ஜனவரி 21ஆம் தேதி ஒரே நேர்கோட்டில் அணிவகுத்து நிற்கும் அதிசய நிகழ்வு நடைபெற இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கோள்கள் அனைத்தும் பூமியிலிருந்து வெகு தொலைவில் இருப்பது மட்டுமின்றி அந்த கோள்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தொடர்புகளில் சுற்றிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த கோள்கள் ஒரே நேர்கோட்டில் தோன்றுவது மிகப்பெரிய அதிசயம் என்றும் கூறப்படுகிறது.

இந்த ஏழு கோள்கள் நேர்கோட்டில் இரவு நேரத்தில் ஒரு அரை வட்டத்தை உருவாக்கி காண்பவர்களுக்கு நீங்கா நினைவுகளை கொடுக்கும் என்றும் இனிமேல் இந்த ஏழு கோள்களும் ஒரே நேர்கோட்டில் நிகழும் நிகழ்வு நடக்கப்போவது இல்லை என்றும் கூறியுள்ளனர். நாளை இரவு 8.30 மணிக்கு அதிசயத்தை பார்க்கலாம் என்றும் இரவு 11:30 மணி வரை இது தோன்றும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிருப்தியில் இருக்கிறாரா சரத்குமார்? மீண்டும் தொடங்கப்படுகிறது அ.இ.ச.ம.க?

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிரிவு தரும் மத்திய அரசு.. உண்மையில் பாதுகாப்பா? அல்லது உளவு பார்க்கவா?

2026 தேர்தலில் 10 சீட்டுக்கள் வேண்டும்.. இப்போதே துண்டு போடும் வைகோ..!

7000 mAh பவர் பேட்டரி.. வாடிக்கையான அம்சங்கள்..! - OPPO K13 5G எப்படி?

அடுத்த 5 நாள்களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்: வெய்யில் கொளுத்தும்: வானிலை எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments