Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹத்ராஸில் அடுத்த மரணம்; இம்முறை பலாத்காரம் செய்யப்பட்ட 6 வயது சிறுமி

Advertiesment
ஹத்ராஸில் அடுத்த மரணம்; இம்முறை பலாத்காரம் செய்யப்பட்ட 6 வயது சிறுமி
, செவ்வாய், 6 அக்டோபர் 2020 (14:48 IST)
ஹத்ராஸை சேர்ந்த 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
உத்தர பிரதேசம் ஹத்ராஸ் பகுதியில் இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் கையில் எடுக்கப்பட்டுள்ளன. 
 
இதற்கே இன்னும் தீர்வு வராத நிலையில் அதே மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உறவினர் வீட்டில் தங்க சென்றிருந்த சிறுமிக்கு இந்த கொடுமை நிகழ்ந்துள்ளது. 
 
உறவுக்கார நபர் ஒருவர் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் சிறுமியை வலுக்கட்டாயமாக பாலாத்காரம் செய்துள்ளார். இதனால் டெல்லி மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த சிறுமி இன்று உயிரிழந்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடிமை விசுவாசத்தை இப்படியா காட்டனும்? கடுப்பான உதயநிதி!