Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5ஜி ஏலம்: ஜியோ, எர்டெலுக்கு போட்டியாக அதானியின் டேட்டா நெட்வோர்க்!

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (19:16 IST)
பிரதமர் மோடி தலைமையிலான  மத்திய அமைச்சரவை சார்பில் சமீபத்தில்  பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், வரும் 2023 ஆம் ஆண்டிற்குள் 5ஜி சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
 

இதற்கு சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், இதில்,ஜியோ, வோடபோன்,  ஏர்டெல், ரிலையன்ஸ் போன்ற  நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்ப விண்ணப்பித்துள்ளன.

இந்த நிலையில், இந்த 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்க இந்தியாவின் டாப் பணக்காரராக உள்ள அதானி விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியானது. இதை உறுதி செய்யும் வகையில்  5ஜி அலைக்கற்றை ஏலம் எடுக்க வுள நிறுவனங்களின் பட்டியலை மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறை வெளியிட்டுள்ளது. அதில், அதானியின் டேட்டா நெட்வோர்க்ஸ்,ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய  நிறுவங்கள் விண்ணப்பித்துள்ளது உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே முன்னணியில் உள்ள ஜியோ, ஏர்டெல் , வோடபோன் ஆகிய நிறுவனங்களுக்கு அதானியின் டேட்டா நெட்வோர்க் கடும் போட்டியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

வரும் 26 ஆம் தேதி நடைபெறவுள்ள ஏலத்தில்5 ஜி அலைக்கற்றை ஏலம் மூலம் 4  புள்ளி 5 லட்சம் கோடி திரட்டவுள்ளதாக கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments