Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா: இந்தியாவில் 415ஆக உயர்வு

ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா: இந்தியாவில் 415ஆக உயர்வு
, திங்கள், 23 மார்ச் 2020 (10:57 IST)
ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா
உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வந்தாலும் இந்தியாவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை பத்துக்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது படிப்படியாக இந்த எண்ணிக்கை உயர்ந்து இன்று இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 415ஆக உயர்ந்துள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதில் ஒரு அதிர்ச்சி செய்தியாக இன்று ஒரே நாளில் மட்டும் 19 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் 18,383 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
இந்தியாவில் சுய கட்டுப்பாடு என்பது சுத்தமாக இல்லை என்பதால் கொரோனாவால் பாதிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் இன்னும் இரண்டு வாரங்களுக்கு மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கி கிடந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றும் இல்லையெனில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக வாய்ப்பிருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர் 
 
கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை மக்கள் சுயகட்டுப்பாடு இருக்க வேண்டும் என்றும் அனைவரும் வீடுகளிலேயே இருப்பதுதான் நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்ன செய்ய சொன்னா என்ன செஞ்சிருக்கீங்க? – பிரதமர் மோடி வேதனை!